யாழ். கொரோனா ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளாப்பட்ட பிரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுளளது.
வட மாகாணத்தின் பல பாகங்களிலும் இருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகளின் அடிப்படையில் நேற்று யாழ் கொரோனா ஆய்வுகூட பரிசோதனையில் இவ்வாறு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதாரசேவை திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர். கேதீஸ்வரன் அருவி இணையத்திற்கு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்று உறுதியான நபர் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தென் இலங்கையைச் சேர்நதவர் என்று அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி